×

காட்பாடி அருகே ஏடிஎம் நம்பர் கேட்டு ₹50 ஆயிரம் அபேஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், ஜூன் 14: காட்பாடி அருகே ஏடிஎம் நம்பர் கேட்டு ₹50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.காட்பாடி அருப்பு மேடு பகுதியை சேர்ந்த செந்தில்(44), வெல்டர். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன். கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து காட்பாடியில் உள்ள எனது வங்கி கணக்கிற்கு ₹50ஆயிரம் பணத்தை அனுப்பினேன். பணம் அனுப்பிய சில மணி நேரத்தில் வங்கி கணக்கிற்கு கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பினை காட்பாடியில் உள்ள எனது மகன் எடுத்து பேசியுள்ளான். அப்போது அழைப்பில் எதிர்முனையில் பேசியவர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறி, ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. உங்களது ஏடிஎம் ரகசிய எண் கூற வேண்டும். அப்போது தான் லாக் எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். எனது மகனும் அவர் வங்கி மேலாளர் என்று நம்பி, ஏடிஎம் ரகசிய எண்ணை கூறியுள்ளான். அடுத்த நிமிடத்திலேயே வங்கி கணக்கில் இருந்த ₹50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நான், வெளிநாட்டில் இருந்து வந்தேன். பின்னர் வங்கிக்கு சென்று கேட்டால், வங்கியில் இருந்து யாரும் ஏடிஎம் ரகசிய எண் கேட்டு அழைக்கவில்லை என்று கூறினர். அப்போது தான் மர்ம ஆசாமிகள் மூலம் ₹50ஆயிரம் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே எனது பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : office ,Katpadi ,SP ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...