×

அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

சிவகாசி, ஜூன் 13: வசந்த காலம் வேண்டி, சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் மாதந்தோறும் குத்துவிளக்கு பூஜை நடக்கும். இந்த மாதம் வசந்த காலம் வேண்டி 108 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜை நடத்தினர். மேலும், பேச்சியம்மனுக்கு தீபசேவை அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஆன்மிக பஜனை புத்தகம் வெளியிடப்பட்டது. கோயில் நிர்வாக தலைவர் ரவீந்திரன் புத்தகத்தை வெளியிட, கோயில் நிறுவனர் பாலசுப்பிரமணியன், கவுரவ ஆலோசகர் செல்வக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Tags : Lamp pooja ,temple ,Amman ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...