×

ஆண்டிபட்டியில் ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஆண்டிபட்டி, ஜூன் 13:  ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி  நிறைவு நாளான நேற்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் 30 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கினார். ஆண்டு தோறும்  1428ம் பசிலிக்கான கிராம கணக்குகள் தணிக்கை செய்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக, அந்த அந்த தாலுகாவில் வருவாய் தீர்பாயம் (ஜமாபந்தி) நடைபெறும்.

அதனடிப்படையில், ஆண்டிபட்டி வட்ட அளவிலான ஜமாபந்தி கடந்த 4 ம் தேதி தொடங்கி புதன், சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நீங்களாக நேற்று 12ம் தேதி வரை  நடைபெற்றது. இதில் 1005 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் சம்மந்தபட்ட அலுவலர்களிடம் மனுக்களை வழங்கப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நத்தம் பட்டா  10 நபர், பட்டா மாறுதல்  10 நபர், முதியோர் உதவித் தொகை  10 நபர்களுக்கு  வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரித்தா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags : completion ,Andipatti ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...