×

விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை பஸ்நிலையம் முன், தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி  பேரணி நடந்தது. எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு மனித சங்கிலி சென்றனர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை (சமூக பாதுகாப்புத் திட்டம்) தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) மைவிழிச்செல்வி, சிவகங்கை டிஎஸ்பி அப்துல்கபூர், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ராமநாதன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்