×

வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து நாசம்

சிங்கம்புணரி, ஜூன் 13: சிங்கம்புணரி அருகே, மின்கம்பி உரசியதால், வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலூர் தாலுகா சாளைக்குப்பட்டியைச் சேர்ந்தவர் மதிவாணன் (50). இவர் சிங்கம்புணரி அருகே, கரடிபட்டிக்கு டிராக்டரில் வைக்கோலை ஏற்றி வந்தார். செருதப்பட்டி அருகே, சாலை குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசி வைக்கோலில் தீப்பிடித்தது. இதை தொடர்ந்து சாலையிலேயே டிராக்டரை நிறுத்தி அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இது குறித்து சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இதில் 40 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதமடைந்தது.
 இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்