×

சிங்கம்புணரியில் பட்டப்பகலில் பயங்கரம் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை

சிங்கம்புணரி, ஜூன் 13: சிங்கம்புணரி அருகே முத்துவடுகநாதர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். நேற்று காலை வரதராஜன், ஈஸ்வரி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.
இதன் பின் மதிய உணவிற்காக வரதராஜன் 1.30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ அலமாரிகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் வரதராஜன் புகார் செய்தார்.

இதன் பேரில் திருப்புத்தூர் டிஎஸ்பி அண்ணாதுரை, சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, கைரேகை நிபுணர்கள் ஆகியோர் விசாரணை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய தாலுகா அலுவலகம் அருகே பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...