×

கொலையில் மூன்று பேர் கோர்ட்டில் சரண்

ராமநாதபுரம், ஜூன் 13:  ராமநாதபுரம் இளமனூர் புரண்டி கண்மாயில் மணல் அள்ளுவதை தடுத்த போது ஏற்பட்ட மோதலில் முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் மோகன் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயபாரத், கார்த்தி, ஆனந்தராஜ், ஹரிஷ், முனியசாமி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

இந்நிலையில்  சென்னை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஒருவரும், கமுதி நீதிமன்றத்தில் இரண்டு பேரும் சரண்டைந்துள்ளனர். நேற்று பரமக்குடி நீதிமன்றத்தில் ராமநாதபுரம் எம்எஸ்கே நகர்  ராமு மகன் ஜெயபாரத்(32), சண்முகவேலு மகன் அருண்குமார்(25), அண்ணா நகர், ரயில்வே குட்செட் தெருவை சேர்ந்த கார்மேகம் மகன் கார்த்திக்(29) ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

Tags : court ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...