×

கீழக்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

கீழக்கரை, ஜூன் 13:  கீழக்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழாவும் கீழக்கரை நகர் திமுக சார்பில் நடைபெற்றது. நகர் செயலாளர் பசீர் அகமது தலைமை வகித்தார்.

துணை செயலாளர்கள் ஜமால் பாருக், கென்னடி, வர்த்தக அணி தலைவர் நயினார், செயலாளர் ஜகுபர், நகர் மாணவர் அணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், இளைஞர் அணி அமைப்பாளர் ஜாபர் முத்துவாப்பா, பொருளாளர் சித்தீக். காங்கிரஸ் மாவட்ட துணைதலைவர் ஹமீதுகான், நகர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி மரைக்கா வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்பி நவாஸ்கனி, திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாஹர், ரவிசந்திர ராமவன்னி ஆகியோர் கலந்து கொண்டு 200கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நகர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எஸ்கேவி முகமது சுஐபு நன்றி கூறினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : voters ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...