×

பல்வேறு தரப்பினரும் அவதி சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 13: ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சனவேலி கிராமம் திருச்சி-ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த ஊர் கிராமமாக இருந்தாலும் இதன் அருகில் உள்ள சிறு கிராமங்களான கண்ணுகுடி, ஒடைக்கால், கவ்வூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் ஏதாவது வீட்டு தேவைகளுக்கான சிறு பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் இங்கு தான் வர வேண்டும்.

இந்த ஊர் சொல்லப்போனால் ஒரு குட்டி டவுன் போன்றது. இப்பகுதி மக்களுக்கு இது மட்டுமின்றி வாரச்சந்தை ஒன்றும் உள்ளது. ஆகையால் எப்போதுமே கொஞ்சம் ஆட்கள் நடமாட்டம் இருக்கவே செய்யும். அப்படியான ஊரில் பொது சுகாதாரத்தை கணக்கில் கொண்டு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துக் கொண்டு திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது என்று அரசும், அரசு அதிகாரிகளும், விளம்பர படுத்துவது எந்த வகையில் நியாயம். இதனை உடனே திறக்க ஏற்பாடு செய்யப்படுமா? என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து பயணி சாந்தி கூறுகையில் எங்களை போன்றவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து பஸ் ஏறிச் செல்லவும் சந்தைக்கு சாமன்கள் வாங்கவும் வருகின்றோம் அவசரத்திற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் பாத்ரூம் பூட்டிக் கிடக்கின்றது உள்ளூரில் அவர் அவர் வீட்டில் பாத்ரூம் கட்டி வைத்துள்ளவர்கள் அந்த பாத்ரூம் பில் சென்று விடுவார்கள் எங்களைப் போன்ற வெளியூர் பெண்கள் மற்றும் உள்ளூரில் பாத்ரூம் இல்லாதவர்களும் என்ன செய்வது திறந்த வெளியில் போக முடியுமா?

கண்மாய், குளம், குட்டையிலும் தண்ணீர் இல்லை இப்படி இருக்கும் நிலையில் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது எத்தனையோ தேவையில்லா செலவுகளை செய்யும் அரசாங்கம் இதனை சரி செய்து கொடுத்தால் என்ன? எது எப்படியோ பொது மக்களின் நலன் கருதி சம்மந்தபட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனே சரி செய்து  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Tags : parties ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...