×

ராமநாதபுரத்தில் நாளைமறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம், ஜூன் 13: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக வரும் 15ம் தேதி ராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர், செவிலியர், லேப் டெக்னீசியன் கல்வித் தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் துறை நிறுவனங்கள், இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.    எனவே, தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இம்முகாம் மூலம் பணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்பட்டால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தங்கள் பெயர் பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Tags : work camp ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...