×

கருமந்துறை மலை கிராமத்தில் கௌதமசிகாமணி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி

ஆத்தூர், ஜூன் 13:பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கருமந்துறை மலை கிராமத்தில், கள்ளக்குறிச்சி எம்பி கௌதமசிகாமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கருமந்துறை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் உள்ளிட்ட 13க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு, நேற்று கள்ளக்குறிச்சி எம்பி கௌதம் சிகாமணி திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மலை கிராம மக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அவர் பேசுகையில், ‘மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மலை கிராமங்களில் விளையும் பொருட்களை இங்கேயே மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி, சந்தைப்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர்  சந்திரமோகன், சிவராமன், தீர்த்தன், சிவராமன், ஜெயவீரன், பரமேஸ்வரன், மாணிக்கம், முருகேசன்,  கமல், இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : voters ,Gotamasikomani ,hills village ,Karumanthara ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...