×

மண்ணூர் மலை கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி

ஆத்தூர் ஜூன் 13:  பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய மண்ணூர் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு  விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி தலைமையாசிரியர் முருகன் பேரணியை  துவக்கி வைத்தார். கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற  பேரணியில், குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு படிக்க அனுப்ப  வேண்டும் என துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் ஜோசப்ராஜ், பாலகுமார்  மற்றும் ஏராளமான  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Awareness rally ,hill village ,Mannoor ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி