மதுரை, ஜூன் 13: மதுரை கோ.புதூர் ரோட்டில் பிரபல ஹோட்டல் உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. வாடிக்கையாளர்கள் பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். இரவு சமையலறையில் சிலிண்டர் லீக் ஆகி கேஸ் வாடை பரவியது. பணியாளர்கள் கேஸ் லீக்காவதை தடுத்து நிறுத்த தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக நிலைய அதிகாரி திருமுருகன் தலைமையில், ஒரு குழுவினர் விரைந்து வந்து, லீக்கான அடுப்பிலிருந்த கேட் லாக்கை மாற்றினர். அதன்பின்பே கேஸ் லீக்காவது நின்றது. தீயணைப்புதுறையினர் துரித பணியால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.