×

நாமக்கல்லில் நாளை தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்,  ஜூன் 13:  நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆசியாமரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 14ம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூபர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், விற்பனையாளர், விற்பனை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை  தேர்வு செய்யவுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, ஐ.டி.ஐ பயிற்சி மற்றும் கணினியில் ஜாவா, டேலி முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் வளர்ப்பு பயிற்சிகளில் சேர பதிவு மற்றும் ஆலோசனை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், நாளை(14ம் தேதி) காலை 10.30 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளாலம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...