நத்தம், ஜூன் 13: நத்தம் ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சியில் யூனியன் அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடம் நாளை பயன்பாட்டுக்கு வருவதையொட்டி அங்கு கணபதி ஹோமம் தொடர்ந்து பூஜைகள் நடந்தது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அந்தோணியார், அதிமுக ஒன்றியசெயலாளர் ஷாஜகான், ஜெ பேரவை மாநில இணைசெயலாளர் கண்ணன், நகர செயலாளர் சிவலிங்கம், அதிமுக நிர்வாகிகள் ஜெயபால், உத்தமன், வேலம்பட்டி முன்னாள் ஊராட்சிதலைவர் கண்ணன், ஊராட்சி செயலர் செந்தில்குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.