×

பேவநத்தம் ஏரி அருகே ஆண் சடலம் மீட்பு

தேன்கனிக்கோட்டை, ஜூன் 13:  கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் ஏரியின் அருகே உள்ள மரத்தடியில், நேற்று அழுகிய நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பேவநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lake ,Pavannath ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...