×

கிருஷ்ணகிரி அருகே 15 வயது சிறுமி கடத்தல்

கிருஷ்ணகிரி, ஜூன் 13:  கிருஷ்ணகிரி அருகே, சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே வெங்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் இவரை பற்றி தகவல் இல்லை. இதுகுறித்து, சிறுமியின் தந்தை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (30) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனது மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி