×

ரூ.6ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

திருவாரூர், ஜூன் 13: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதம மந்திரி கிஷான்சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24ம்தேதி செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தகுதியுடைய விவசாயிகள் மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுகளுக்கும் இத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வரும் 30ந் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது வருவாய்த்துறையின் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருவதால் இந்த நிகழ்ச்சியிலும் பட்டா மாறுதல் குறித்த விண்ணப்பங்களை அளித்து உடனடியாக பயன்பெறுமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கோரிக்கை

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்