×

திருத்துறைப்பூண்டி அருகே லாரி விபத்தில் டிரைவர் படுகாயம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 13: திருத்துறைப்பூண்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி இடித்ததில் டிரைவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரம் பெட்ரோல் பங்க் அருகில் வீரன் கோவில் உள்ளது. இதில் நேற்று எம்.சான்ட் ஏற்றிவந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் (39) லாரியை வீரன் கோயிலில் நிறுத்திவிட்டு சாமிகும்பிட்டு விட்டு பின்னர் லாரியை ஓட்டினார். அப்போது பின்னால் கரூரிலிருந்து ஆயக்காரன்புலத்திற்கு ஹாலோ பிளாக் ஏற்றிய லாரி வந்தது. இந்த லாரியை கிளீனர் நாகலிங்கம் (25) ஓட்டிவர லாரி டிரைவர் ரஜினி (28) தூங்கிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. லாரி மடப்புரம் வீரன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை கவனிக்காமல் கிளீனர் நிலைதடுமாறி வலதுபுறமாக திருப்பினார். இதில் லாரியின் இடதுபுறம் முழுவதும் சேதமடைந்து லாரியில் தூங்கிக்கொண்டிருந்த டிரைவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : truck accident ,Tiruthuraibandi ,
× RELATED தெலுங்கானா மாநிலம் டேங்கர் லாரி...