×

நீடாமங்கலத்திலிருந்து 1,250 டன் அரிசி கோவைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், ஜூன் 13: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோக திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்களை தனியார் அரவை முகவர் மூலம் அரவை செய்த அரிசி மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி, நவீன அரிசி ஆலை சுந்தரகோட்டை, வட்ட கிடங்குகள் மன்னார்குடி, கீழபாண்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொது ரக அரிசி மூட்டைகளை நேற்று 100 லாரிகளில் 1,250 டன் பொது ரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்களில் கோவை மண்டலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...