×

தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, திமுக எம்எல்ஏ கலெக்டரிடம் மனு கொடுத்தார். தர்மபுரி மாவட்ட திமுக செயலாளரும், தர்மபுரி தொகுதி எம்எல்ஏவுமான தடங்கம் சுப்ரமணி, நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்தும் கூட, குடிநீர் பிரச்னை தீரவில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 32 ஊராட்சிகள், தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகள் மற்றும் தர்மபுரி நகராட்சி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைகளுக்கு, போர்க்கால அடிப்படையில் உடனடி தீர்வு காண வேண்டும். மாவட்டம் முழுவதும் செல்லும் இடங்களில், மக்கள் குடிநீர் பிரச்னைக்காக புகார்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை குறித்து உடனடியாக பரிசீலனை செய்து, குடிநீர் பிரச்னைக்கு நிதி ஒதுக்கி தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...