×

ஓய்வு போலீஸ்காரரின் நிலத்தை ஆக்கிரமித்ததாக விவசாயி மீது வழக்கு

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் விஜயன்(77). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக பாப்பாரப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியில் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது நிலத்திற்கு அருகே, சண்முகம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், சண்முகத்தின் விவசாய கிணறு இடிந்து, விஜயன் நிலத்தில் சரிந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே, கடந்த 3 ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே, சண்முகம் விஜயன் நிலத்தை ஆக்கிரமித்து அதில் உள்ள தென்னை மற்றும் செடிகளையும் சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து, ஏ.பள்ளிப்பட்டி போலீசில் விஜயன் புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்துள்ளனர். இதையடுத்து விஜயன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், ஏ.பள்ளிப்பட்டி போலீசார், விஜயனின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து அபகரிக்க முயன்றதாக சண்முகம் மீது 447வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : land ,policeman ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!