பட்டுக்கோட்டை, ஜூன் 13: பட்டுக்கோட்டை கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கல்லூரியில் ஹெட் டூகெதர் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் 2016-19ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி சேர்மன் தலைமை வகித்து பெற்றோர் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கல்லூரியில் படிக்கவிருக்கும் மாணவிகளுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்பது உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்தார். கல்லூரி முதல்வர் ஷீலா முன்னிலை வகித்தார். மேலும் மாணவிகள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.தமிழ்த்துறை பேராசிரியர் மதுரவேணி வரவேற்றார். இயற்பியல் துறைத்தலைவர் நாச்சியம்மாள் நன்றி கூறினார். உயிர் வேதியியல துறைத்தலைவர் பத்மபிரியா, கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் பூமா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.