ஜெயங்கொண்டம், ஜூன் 13: ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்விக்டர் (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தெய்வநாதன் (52) என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜான்விக்டர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெய்வநாதன், அவரது மகன்கள் சகாயசெல்வம் (22), அஜித்குமார் (24) மற்றும் தெய்வநாதன் மனைவி பிரான்சிஸ் மேரி (48) ஆகியோர் சேர்ந்து ஜான்விக்டரை சுத்தியலால் தலை மற்றும் உடம்பில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஜான்விக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.