×

மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் பகுதியில், திருமானூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பூமிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன் போலீசார் அதன் டிரைவர் திருமழபாடியை சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமார் (25), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன் வந்த திருமழபாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சசிகுமார் (29) உள்பட இருவரையும் கைது செய்து, மணல் கடத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...