×

மறைமலைநகர் திமுக இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்தநாள் மாதம் முழுவதும் அன்னதானம்

செங்கல்பட்டு, ஜூன் 13: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, இம்மாதம் முழுவதும், மறைமலைநகர் நகர திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மறைமலைநகர், நகர திமுக இளைஞரணி சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் மதிய வேலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 3ம் தேதி தொடங்கியது.

இதைதொடர்ந்து, நகர இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே.கமலக்கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது.இதைதொடர்ந்து, இளவழகனார் தெருவில் இம்மாதம் 3 முதல் 30ம் தேதி வரை அன்னதானம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் தயிர், பிரிஞ்சி, பிரியாணி, சாம்பார் சாதம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இறுதி நாளான ஜூன் 30ம் தேதி 2000 பேருக்கு பிரியாணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி நாளான 30ம் தேதி, காஞ்சி வடக்கு மாவட செயலாளர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகர செயலாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags : Karunanidhi ,birthday ,Annadhanam ,DMK Youth ,
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...