×

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

உத்திரமேரூர், ஜூன் 13: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி எல்லம்மாள். இவர்களது மகள் தேவகி (20). இவருக்கும், திருப்புலிவனத்ைத சேர்ந்த சிங்காரம் (28) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தேவகி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவனுடன் தகராறு ஏற்பட்டு, தேவகி, தாய் வீடு சென்றார். அப் போது அவரை, பெற்றோர் ண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தேவகி, நேற்று  வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், அதை கண்டு கதறி அழுதனர். புகாரின்படிஉத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை