×

நாகை வேதாரண்யத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், ஜூன் 13: குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வனம் தலைமை வகித்தார். குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் விடுத்த உத்தரவை அமல்படுத்தி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றிய சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை கஜா புயல் பாதிப்பு கருதி ரத்து செய்ய வேண்டும். விடுபட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. கூட்டத்தில் சங்கத்தின் ஒன்றிய தலைவராக பன்னீர்செல்வம், செயலாளராக கோவை சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Nagapattinam Vedaranyam ,Kaveri ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...