×

புஷ்பவனம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு

வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைபள்ளி கோடைவிடு முறைமுடிந்து புதிதாக பள்ளி திறக்கப்பட்டு பிளஸ் 1 மாணவ, மாணவிகளின் சேர்க்கை நடபெற்றது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்1 வகுப்பில் சேர தங்களது பெற்றோர்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்தனர். புதிதாக பள்ளியில் சேர வந்த மாணவ, மாணவிகளை மகிழ்ச்சியாக வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் ரோஜாப்பூ வழங்கி வரவேற்றனர்.

Tags : Pushpavanam Government ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை...