கரூர், ஜூன் 13: நாளை இலவசவேலைவாய்ப்புமுகாம் நடைபெறுகிறது. கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளி) காலை 10மணி அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலையளிப்போர் அல்லது அவர்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்துகொள்ளலாம். முகாமில் 10ம்வகுப்பு முதல் டிகிரிவரை படித்தவர்கள்பங்கேற்று தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லலாம். இதுஒருஇலவச பணி என்பதால் ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பு தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.