×

காங்கயம் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

காங்கயம்,ஜூன்13:  காங்கயம் அருகே போக்குவரத்துக்கு இடையூராக ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காங்கயம் சென்னிமலை ரோட்டில் நால்ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. நால்ரோடு பஸ்நிறுத்தத்திலிருந்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி ஈரோடு, காங்கயம், முத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதி எந்த நேரமும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள், பேக்கரிகளில் உணவருந்துவதற்காக லாரி உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள் வாகனங்களை ரோட்டின் இரண்டு புறங்களிலும் நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். அந்த இடம் சற்று வளைவான பகுதி என்பதால் ரோட்டின் இரண்டு புறங்களிலும் நிற்கும் வாகனங்களால் ஏனைய வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் போவதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  எனவே போலீசார் இந்த பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்து இடையூராக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...