×

மடத்துக்குளம் தொகுதியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்

உடுமலை, ஜூன் 13:  மடத்துக்குளம் தொகுதியில் 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் மற்றும் உடுமலை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த 12 ஊராட்சிகள் உள்ளன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டம், கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், மடத்துக்குளம் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது.எனவே, ரூ.85 கோடி செலவில், 318 கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. தற்போது தொகுதிக்கு உட்பட்ட குரல்குட்டை மடத்தூர்  கிராமத்தில், குடிநீர் குழாய்கள் லாரி மூலம் கொண்டு வந்து இறக்கப்பட்டன. திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : Madathukulam ,constituency ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...