×

மணல் கடத்திய லாரி சிக்கியது

உடு மலை,ஜூன்13:  உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில், டாரஸ் லாரியில் மணல் கடத்தி வந்து தனியார் இடத்தில் கொட்டப்படுவதாக, வட்டாட்சியர் தங்கவேலுவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வட்டாட்சியர் நேற்று அங்கு சென்று விசாரித்தார். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து, தவிடு மணல் என்ற பெயரில் 6 டன் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த வட்டாட்சியர், உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்