×

நெல்லை பல்கலை. அறிவிப்பு எம்சிஏ மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு

நெல்லை, ஜூன் 13:  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 2016-17ம் ஆண்டில் எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பிற்கு சேர்ந்து ஏப்ரல் 2019ல் இறுதி தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் 2017-18ம் ஆண்டில் முதுநிலை (கலை, அறிவியல்) பட்டப்படிப்பிற்காக சேர்ந்து ஏப்ரல் 2019ல் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுடைய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இவர்கள் தங்கள் படிப்பு காலத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 28.6.2019 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படுகிறது. கல்லூரிகளில் குறிப்பிட்ட கல்வி ஆண்டிற்கு முன்னர் பயின்ற தனித்தேர்வர்களுக்கு அனுமதியில்லை. இதற்காக முதுநிலை மாணவர்கள் 13.6.2019 முதல் 18.6.2019 வரை www.msuniv.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்குரிய தேர்வுக்கட்டணம் ரூ.1000த்தை இணையதளம் மூலம் செலுத்தவேண்டும். இந்த சிறப்பு துணைத்தேர்வை எழுதும் மாணவர்கள் அதற்குரிய அனுமதிச் சீட்டை 24.6.2019 முதல் www.msuniv.ac.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். சிறப்பு துணைத்தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெறும் என பல்கலைக்கழகப் பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார்.


Tags : University ,Special Assistant Examination ,Nellai Announcement ,MCA ,
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...