மதுரை, ஜூன் 12: போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1ம் தேதி ெபன்ஷன் வழங்க வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாநாட்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மாதத்தின் முதல் தேதியிலேயே பென்ஷன் வழங்க வேண்டும். 44 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்காமல் உள்ள அனைத்து வித பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சங்கத்தின் தலைவராக குருசாமி, செயலாளராக தேவதாஸ், பொருளாராக சுப்ரமணியன் உள்ளிட்டோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக ஓய்வு தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி பைபாஸ் ரோட்டில் நடந்தது.