×

திருவாடானை பாரதி நகரில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

திருவாடானை, ஜூன் 12:  திருவாடானை அருகே பாரதி நகரில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூரி ஊராட்சியைச் சேர்ந்தது பாரதி நகர். இது கல்லூர் ஊராட்சியை சேர்ந்தது என்றாலும் திருவாடானையை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் இங்குதான் குடியிருந்து வருகின்றனர். இதனால் இது வளர்ந்து வரும் பகுதியாக மாறி விட்டது. இங்கு வரிசை வரிசையாக வீதிகள் இருந்தும் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் கட்டப்படவில்லை.

இதனால் வீடுகளின் ஓரத்திலும் மெயின் ரோட்டிலும் சாக்கடை தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி இங்கு குடியிருப்போரை தூங்க விடாமல் தொல்லை கொடுத்து வருகிறது. இந்த சாக்கடை நீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வரும் நிதியாண்டில் சிறப்பு நிதி ஒதுக்கி சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : city ,Bharat ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...