×

ராமநாதபுரம் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

ராமநாதபுரம், ஜூன் 12:  ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் இசிஆர் சாலையில், பேராவூர் கிழக்கு பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் வினோத்(28) டூவீலரில் சென்றார். பேராவூர் கண்மாய் வளைவு அருகே சென்றபோது டூவீலர் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்ைட இழந்த டூவீலர் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்தார்.

கேணிக்கரை போலீசார் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வினோத் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் ஊர் திரும்பிய நிலையில் விபத்தில் பலியானார். அவருக்கு வித்யா என்ற மனைவியும், 8 மாத குழந்தையும் உள்ளனர்.

Tags : youngster ,tunnel ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...