×

நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு

திருப்பூர், ஜூன் 12: கொங்கு மண்டலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட உடுமலை பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியின் கழக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் எம்.பி. மற்றும் ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட தாராபுரம், காங்கயம் சட்டமன்ற தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி எம்.பி தேர்வு செய்த வாக்காளர் பெரும் மக்களுக்கும் மற்றும் கொங்கு மண்டல வாக்காளர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்க வருகை தரும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் உள்ள திடலில் கொங்கு மண்டல வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில், திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், தாராபுரம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளுக்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள், கழக தோழர்கள்  கலந்து கொள்ள வேண்டும்.

Tags : Stalin ,DMK ,meeting ,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...