×

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஒரு தலையாக காதலித்த வாலிபர் கைது

ராஜபாளையம், ஜூன் 12:  ராஜபாளையத்தில் இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையத்தில் உள்ள ஆவாரம்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் தினேஷ்குமார் (23), அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். நேற்று முன்தினம் இளம்பெண்ணை சந்தித்த தினேஷ்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ்குமார், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்ஐ முத்துக்குமார் வழக்குப்பதிந்து தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : head ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்