×

திருவில்லிபுத்தூரில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் புகை மூட்டம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 12: திருவில்லிபுத்தூரில் குப்பைகளில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ராஜபாளையம் மெயின்ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பரபரப்பாக இருக்கும் இந்த சாலையின் அருகே உள்ள ஓடைகள், பாலங்கள் கழிவுகளையும், குப்பைகளையும் எரிக்கின்றனர். இதனால், ஏற்படும் புகை மெயின் ரோடு முழுவதும் பரவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதை தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக இந்த சாலையில் சர்ச் பாயிண்ட் அருகே, பாலம் மற்றும் திருப்பாற்கடல் முக்கு பகுதிகளில் அடிக்கடி குப்பைக் கழிவுகளை எரிக்கின்றனர். இதில் ஏற்படும் புகை மூட்டம் சாலையை மறைக்கும் அளவுக்கு, அதிகமாக வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரம் குப்பைக் கழிவுகளை எரிப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...