×

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலம்

விருதுநகர், ஜூன் 12: விருதுநகரில் உள்ள வெயிலுகந்தம்மன் கோயிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விருதுநகர் வெயிலுகந்தமன் கோயிலில், வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, ஏராளமானோர் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும், இன்று பக்தர்கள் கயிறு குத்துதல், அக்னிச்சட்டி மற்றும் கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், பல்வேறு வேடமணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், பறவை காவடி, அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதில் விருதுநகர், மதுரை, சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள விருதுநகர் பகுதி மக்கள் சொந்த ஊர் திரும்பி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

Tags : festival festival ,Virudhunagar Veilukanthamman ,
× RELATED அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர்...