×

தொடர் மழையால் நிரம்பியது கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல், ஜூன் 12:கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள நட்சத்திர ஏரி நிரம்பியது. இதனால் ஏரி தற்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த பல தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்டவைகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகின்றது. இந்நிலையில் நேற்றும் கொடைக்கானலில் காலை முதலே சாரல் மழை அவ்வப்போது பெய்தது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடியது. கொடைக்கானல் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல மாதங்களுக்கு முன்பு நிரம்பிய ஏரி, மீண்டும் நேற்று நிரம்பிவழிய தொடங்கியுள்ளது. ஏறி நிரம்பியுள்ள இந்நிலையில் கொடைக்கானல் ஏரி பார்ப்பதற்கு மிக அழகாக ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Tags : Kodaikanal Lake ,
× RELATED கொடைக்கானலில் நவீன இயந்திரம் மூலம் ஏரியில் தூய்மை பணி