இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: முன்பு எல்லாம் வன விலங்குகள் இதுபோல் ஊருக்குள் வந்தது கிடையாது. தற்போது வனப்பகுதியில் கடும் உணவு பஞ்சமும், குடிநீர் பஞ்சமும் ஏற்படுவதுதான் காரணமாகிறது. ஆபத்துக்கள் ஏற்பட்ட பின்பு வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து வந்து யாருக்கும் பயன் இல்லை. வரும் முன்பு காப்பது சிறந்ததாகும். மேலும் வனப்பகுதியில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் வனவிலங்குகளால் மனிதர்களுக்கும், விளை நிலங்களுக்கும் ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றனர்.