×

கணவருக்கு 2-வது திருமண ஏற்பாடு

கோவை, ஜூன்.12:   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் செந்தில்குமார்(29). மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மைசூரை சேர்ந்த அனுபாமாவுக்கும் கடந்த 24.7.2011-ல் மைசூரில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வருமாறு செந்தில்குமார் உறவினர்களுடன் சேர்ந்து அனுபாமாவை தொந்தரவு செய்துள்ளார்.இதனால், விரக்தியடைந்த அனுபாமா சில ஆண்டுக்கு முன்பு மைசூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், செந்தில்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையில் அவரது பெற்றோர் ஈடுபட்டதாக தெரிகிறது. இத் தகவலறிந்த அனுபாமா நேற்று முன் தினம் செந்தில்குமர் வீட்டிற்கு வந்து இது குறித்து அவர்களிடம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செந்தில்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள் அனுபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அனுபாமா உடனடியாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் செந்தில்குமார், அவரது தந்தை ரங்கசாமி, தாய் இந்திராணி, தங்கை அமுதவேணி, அவருடைய கணவர் மூர்த்தி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், மனைவிக்கு தெரிவிக்காமல் கணவருக்கு 2-வது திருமண ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்