திருச்செங்கோடு, ஜூன் 12: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில், புதிதாக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், நூலகம் அமைக்க வேண்டும் என எஸ்பி அருளரசு உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது. இங்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நீதிக்கதைதகள், பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்கு வரும் மனுதாரர்கள், புகார்தாரர்கள், அதிகாரிகளுக்காக காத்திருக்கும் நேரத்தில், இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து பயன்பெறலாம் என்ற உயரிய நோக்கில் இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.