×

நீதிமன்ற வளாகத்தில் மரக்கிளை விழுந்து கார் நொறுங்கியது

கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் மரக்கிளை விழுந்து கார் நொறுங்கியது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(29). இவர், வழக்கு ஒன்றிற்காக நேற்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு காரில் வந்திருந்தார். நீதிமன்றத்தில் முதல் கேட் பகுதியில் புளிய மரத்திற்கடியில் காரை நிறுத்தி விட்டுச்சென்றார். மாலை நேரத்தில் அப்பகுதியில் காற்று பலமாக வீசியபோது அந்த மரத்தின் கிளை திடீரென உடைந்து காரின் மீது விழுந்தது. இதில், கார் சேதமடைந்தது. நல்ல வேளையாக அந்த பகுதியில் யாரும் இல்லாததாலும், காரில் யாரும் இல்லாததாலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் கிரேன் மூலமாக மரக்கிளையை அப்புறப்படுத்தினர்.

Tags : courtroom ,
× RELATED எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி...