×

பழங்குடியினர் விடுதியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி, ஜூன் 12:  தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் மதிகோண்பாளையம்(பெண்கள்) மற்றும் மாரண்டஅள்ளி(ஆண்கள்) பழங்குடியினர் நல விடுதிகளில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட பள்ளி விடுதிகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி விடுதியில் சேர வரும் 28.06.2019 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியரது பெற்றோரின் வருமான வரம்பு ஆண்டிற்கு ₹2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு விடுதிக்கு தலா 5 பேர் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Hotel ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...