×

சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை திருவாரூரில் இருந்து நெல்லைக்கு 1250 மெ.டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூர், ஜூன் 12: திருவாரூரிலிருந்து நேற்று நெல்லை மாவட்டத்திற்கு பொது விநியோக திட்டத்திற்காக ஆயிரத்து 250 மெ.டன் அரிசி ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்ட நிலையில் பின்னர் அறுவடை பணிகள் நடைபெற்றதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 436 அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து 5 லட்சத்து 43 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரத்து 250 மெ.டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...