×

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜூன்12: திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் மற்றும் வேதாரணயம் தாலுகா ஒரு பகுதி மற்றும் மன்னார்குடி தாலு்கா பாதிபகுதியில் உள்ளவர்கள் திருத்துறைப்பூண்டியில் பள்ளி.கல்லூரிக்கும். தாலுகா அலுவலகம். நீதிமன்றம் போன்ற பல்வேறு அரசு அலுவலகம், அரசு வங்கி, தனியார் வங்கிவரவேண்டும்.அனைவரும் காலை, மாலை ஒரே நேரம்தான் வந்து போக வேண்டும்.எனவே மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நலன் கருதி திருத்துறைப்பூண்டி - எடையூர், திருத்துறைப்பூண்டி - கச்சனம், திருத்துறைப்பூண்டி - கோட்டூர், திருத்துறைப்பூண்டி - மேலகொருக்கை வரை காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Tags : Thiruthuraipondi Taluka ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...