×

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு, மீட்பு பணிகள் விழிப்புணர்வு பயிற்சி

கரூர், ஜூன் 12: பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது, கரூர் ராமகிருஷ்ணபுரம் தனியார் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பயிற்சியினைஅளித்தனர். மாணவ மாணவியர் மத்தியில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வீடுகளிலோ, அலுவலகத்திலோ ஏற்படும் தீ விபத்து, நீர்நிலைகளில் தவறி விழும் பட்சத்தில் தன்னை மற்றும் தன்னோடு சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முதல்உதவி கருவிகள், மீட்பு கருவிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : school students ,Karur Ramakrishnapuram ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு